திருச்செந்தூர் அருகே ரூ2.5 கோடி அம்பர்கிரீஸ் பறிமுதல்

உடன்குடி: தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் போலீசார் வாரச்சந்தை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரை கண்டதும் ஓடிய வாலிபரை விரட்டி பிடித்து விசாரித்தனர். இதில் அவர், உடன்குடி புதுமனையை சேர்ந்த குமரன் (38) என்பதும் வாசனை திரவியம், நறுமணப் பொருகள் தயாரிக்க பயன்படும் திமிங்கிலத்தின் எச்சமான 2.560 கிலோ அம்பர் கிரீசை வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் சர்வதேச மதிப்பு ரூ.2.5 கோடி. தகவலின்படி திருச்செந்தூர் வனச்சரக அலுவலர் கனிமொழி அரசு, குமரனை கைது செய்து அவரிடமிருந்து அம்பர் கிரீஸை பறிமுதல் செய்தார்.

Related posts

கந்துவட்டி பிரச்சனை வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உயர் நீதிமன்றக்கிளை உத்தரவு

ஆலத்தூர் ஒன்றியத்தில் தனி நபர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட 13 ஏக்கர் நிலம்: மரக்கன்றுகளை நட்டுவைத்து கலெக்டர் அசத்தல்

சென்னை புறநகர் பகுதிகளில் காற்றுடன் கனமழை