திருப்பூர்: அமராவதி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக முதற்கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் 90 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் 84 அடியை நெருங்கி உள்ளது. அமராவதி அணைக்கு 6,000 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருப்பதால் அணை முழு கொள்ளளவை எட்ட உள்ளது. அணை முழு கொள்ளளவை எட்டிய உடன் உபரி நீர் ஆற்றில் திறக்கப்படும் என்பதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.