குற்றாலம் அருவிகளில் 3 நாட்களுக்குப் பின் குளிக்க அனுமதி

தென்காசி: குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குற்றாலத்தில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளப்பெருக்கு காரணமாக மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. கனமழை குறைந்து அருவிகளில் சீராக நீர் வரத் தொடங்கியது. இதனால் குற்றாலம் அருவிகளில் 3 நாட்களுக்குப் பின் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குற்றாலம் சென்ற சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளித்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related posts

ராகுல்காந்தியை தீவிரவாதி என்று விமர்சித்த ஒன்றிய அமைச்சர் மீது பெங்களூருவில் வழக்குப்பதிவு

குடிமகன்களுக்கு கொண்டாட்டம் ஆந்திராவில் மது விலை குறைப்பு

தெலுங்கு கங்கை கால்வாய் மூலம் சென்னைக்கு 1200 கன அடி தண்ணீர்: கண்டலேறு அணையில் இருந்து 30ம் தேதி வரை விநியோகம்