சென்னை: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என திண்டிவனம் அருகே தைலாபுரத்தில் ராமதாஸ் தலைமையில் நடந்த பா.ம.க. நிர்வாக குழு கூட்டத்துக்கு பின் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். பா.ம.க. தலைவர் அன்புமணி, கவுரவ தலைவர் ஜி.கே.மணி உள்பட 15 பேர் கூட்டத்தில் பங்கேற்றனர்