லக்னோ: பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தனது டிவிட்டர் பதிவில், ‘‘பகுஜன் சமாஜ் கட்சியானது மக்களவை தேர்தலில் தனித்து போட்டியிடுகின்றது. தேர்தலுக்கு முற்றிலும் தயாராக இருக்கிறது. பகுஜன் சமாஜ் தேர்தல் கூட்டணி அமைக்கிறது மற்றும் மூன்றாவது முன்னணி அமைக்கிறதுபோன்ற வதந்திகள் போலியானது மற்றும் தவறானவை. மக்களும் கவனமாகஇருக்க வேண்டும். உத்தரப்பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் தனித்து போட்டியிடுவதால் பாஜ அமைதியற்று இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.