கூட்டணியில் தொகுதி உடன்பாடு பேச மதிமுக குழு: வைகோ அறிவிப்பு

சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் நாடாளுமன்ற தேர்தல் தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த மதிமுக சார்பில் பேச்சுவார்த்தை குழு அமைக்கப்படுகிறது. அதில் அவைத் தலைவர் அர்ஜூனராஜ், பொருளாளர் செந்திலதிபன், அரசியல் ஆய்வு மைய செயலாளர் அந்திரிதாஸ், தேர்தல் பணி செயலாளர் வி.சேஷன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல, மதிமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவில் துணைப் பொதுச்செயலாளர் ராசேந்திரன், கொள்கை விளக்க அணி செயலாளர் வந்தியத்தேவன், தணிக்கைக்குழு உறுப்பினர் செந்தில்செல்வன், இளைஞரணி செயலாளர் ஆசைத்தம்பி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3096 கனஅடியாக உயர்வு!

ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர், இலங்கை கடற்படையால் கைது!

ஹெலிகாப்டர் சகோதரர்களான பாஜ பிரமுகர்களின் சொத்தை வழக்கில் இணைக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு