நீதிபதி ஷமீம் அகமது, அலகாபாத்தில் 1966ம் ஆண்டு பிறந்தார். சட்டப்படிப்பை முடித்து 1993ம் ஆண்டு வழக்கறிஞராக பணியை தொடங்கிய அவர், 2019ம் ஆண்டு அலகாபாத் உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாகவும், 2021ம் ஆண்டு நிரந்தர நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்ட அவரை வரவேற்று, தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன், எம்பிஏ தலைவர் பாஸ்கர் மற்றும் பெண் வழக்கறிஞர்கள் சங்க தலைவி என்.எஸ்.ரேவதி, லா அசோசியேசன் தலைவர் செல்வராஜ் ஆகியோர் பேசினர். இறுதியில் நீதிபதி ஷமீம் அகமது ஏற்புரையாற்றினார்.