சென்னை: அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களையும் 24 மணி நேரமும் கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது என்று நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மெட்ரோ நிர்வாகம் எடுத்துள்ளது. மெட்ரோ ரயில் நிலையங்களுக்குள் மழைநீர் வராத வகையில் மண் மூட்டைகள் உள்ளிட்டவை தயார் நிலையில் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.