தென் மாவட்டங்களில் மீட்பு பணிகளில் ஈடுபட்ட மீனவர்களுக்கு அரசு சார்பில் தூத்துக்குடியில் அண்மையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்நிலையில், மிக்ஜாம் புயலால், சென்னை – திருவள்ளூர் – செங்கல்பட்டு – காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது, படகுகளோடு களத்தில் இறங்கி மக்களை மீட்டதோடு – அரசின் நிவாரணப் பணிகளுக்கும் துணை நின்ற 1200 மீனவ மக்கள் – அப்பணிகளை ஒருங்கிணைத்த அரசு அலுவலர்களுக்கு, மீன்வளத்துறை சார்பில் சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாராட்டு விழாவில் இன்று பங்கேற்றோம்.
நேர்மையும் – துணிச்சலும் – கேட்காமலேயே பிறருக்கு உதவி செய்கின்ற பண்பையும் கொண்டுள்ள நம் மீனவர்களுக்கு திமுக அரசு என்றும் துணை நிற்கும். மழை பாதிப்பு மீட்பு நடவடிக்கைகளில் அரசுக்கு நல்ல பெயர் கிடைத்ததற்கு மீனவர்களின் பங்கு மிக முக்கியம். வெள்ள பேரிடரில் வேறொரு உயிரை காப்பாற்றிய மீனவர்கள் அனைவருமே கடவுள்கள்தான்; இன்னொரு உயிரை காப்பாற்றுபவனே உண்மையான இறைவன் இவ்வாறு கூறினார்.