இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், ஏழைகள் ஆகிய 4 பிரிவினருக்கு அரசு முக்கியத்துவம் தருவதாக பட்ஜெட்டில் நிதி அமைச்சர் குறிப்பிட்டார். ஆனால் அவர்களுக்கான எந்த அறிவிப்பும் இல்லை. அதற்கு பதிலாக பல வெற்று அறிவிப்புகள் மட்டும் இடம் பெற்றுள்ளன. உதாரணமாக, 1 கோடி வீடுகளுக்கு சோலார் மேற்கூரை பொருத்தும் திட்டத்தின் மூலம் மாதம் 300 யூனிட் மின்சாரம் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமா, இந்த சோலார் மூலம் கிடைக்கும் மின்சாரத்தை மக்கள் அவர்களின் சொந்த பயன்பாட்டிற்கு உபயோகித்தது போக, எஞ்சியிருக்கும் மின்சாரத்தை விற்று பணமாக்கலாம் என யூகத்திலேயே அறிவிப்புகள் உள்ளன.