டெல்லி: அனைத்து துறைகளிலும் பெண்கள் முன்னேற அவர்களை ஊக்குவிக்கிறோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் 51ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணையை காணொளி மூலம் வழங்கி பிரதமர் மோடி பேசியுள்ளார். அரசின் கொள்கைகளால் பெண்களின் எதிர்காலத்திற்கு புதிய கதவுகள் திறக்கப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.