கொரோனா காலத்தில் மக்களுக்கு ஏற்பட்ட நெருக்கடியை காட்டிலும் இந்த தொற்றுநோய் மிகவும் பேரழிவை ஏற்படுத்தும் என்றும் கூறுகின்றனர். பறவைக் காய்ச்சலின் எச்5என்1 வகை வைரசானது மிகவும் தீவிரமானது என்றும், அதன் மாதிரிகள் பசு, பூனை, மனிதர்கள் உள்ளிட்ட பாலூட்டிகளிடம் இருப்பதாக கூறியுள்ளனர். மேலும் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பால் பண்ணையில் பணிபுரியும் ஒருவருக்கு, இந்த எச்5என்1 வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.
அமெரிக்காவின் ‘டெய்லி மெயில்’ வெளியிட்ட செய்தியில், ‘டெக்சாஸில் ஒருவருக்கு எச்5என்1 வைரஸ் பரவி உள்ளது. இது பறவைக் காய்ச்சலாக இருக்கலாம். தற்போது அவருக்கு வைரஸ் தடுப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டெக்சாஸின் பார்மர் கவுண்டியில் சுமார் 1.6 மில்லியன் முட்டையிடும் கோழிகள் மற்றும் 337,000 குஞ்சுகள் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாகக் கண்டறியப்பட்டதால், அவை அழிக்கப்பட்டன. ஆனால், தற்போது பறவைக் காய்ச்சல் அபாயம் இல்லை என்றும், தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக அமெரிக்க கால்நடை பராமரிப்பு துறை கூறியுள்ளது.