இதன்பின்னர் அந்த காரை மக்கள் சிறை பிடித்துவைத்துக்கொண்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அம்பத்தூர் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் மகேந்திரன் தலைமையில் போலீசார் வந்து ஜான்சனை கைது செய்து விசாரித்தனர். இதில் அவர் மது போதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தியது தெரிந்தது. ஆனால் ஜான்சன், தான் மது குடிக்கவில்லை என்றும் குடித்துள்ளேன் என்றும் மாற்றி, மாற்றி பேசியதுடன் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து அவரது ஓட்டுநர் உரிமத்தை கைப்பற்றியதுடன் மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுதல், விபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டுதல் உட்பட பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்ததுடன் அவருக்கு அபராதம் விதித்து உள்ளனர்.