குறைவான ஆல்கஹால் அளவு உள்ளிட்ட புதிய வகை பீர் ரகங்களை அறிமுகப்படுத்த திட்டம்: டாஸ்மாக் அதிகாரிகள் தகவல்

சென்னை: குறைவாக ஆல்கஹால் அளவு உள்ளிட்ட புதிய வகை பீர் ரகங்களை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளில் தற்போது வரை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பீர் மற்றும் தமிழகத்தில் உள்ள பல்வேறு பீர் ஆலைகளில் தயாரிக்கப்படும் 35 பீர் வகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் பல்வேறு வகையான பீர் ரகங்களையும், புதிய நிறுவனங்களில் பீர் வகைகைளையும் விரைவில் அறிமுகப்படுத்த டாஸ்மாக் திட்டமிட்டுள்ளது.

இது குறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறியதாவது: சமீபத்தில் மத்தியபிரதேச மாநிலத்தை சார்ந்த கம்பெனிக்கு கும்மிடிப்பூண்டியில் மது தொழிற்சாலை தொடங்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இந்த கம்பெனியின் பீர் வகைகளை கொள்முதல் செய்ய டாஸ்மாக் நிறுவனம் முடிவு செய்துள்ளது. நவ.10ம் தேதிக்கு பிறகு ஹன்டர், உட்பெக்கர், பவர் கூல் உள்ளிட்ட புதிய ரக பீர்கள் விற்பனைக்கு வர உள்ளது. இதே போல் பிற மாநிலங்களில் இருந்தும் விதவிதமான ரகங்களில் பீர் வகைகள் வாங்கி டிசம்பர் மாதத்தில் இருந்து விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சமீபத்தில் டாஸ்மாக் கடைகளில் 100 சதவீதம் பார்லி சார்ந்த பீர் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது 4 சதவீதம் ஆல்கஹால் கொண்ட பீர் வகைகளை வாங்கி விற்கவும் ஏற்பாடு நடந்து வருகிறது. வெளிமாநில பீர் வகைகளை விற்பனை செய்ய ஏதுவாக அந்தந்த கம்பெனியினர் ‘கூலிங் பிரிட்ஜ்’ வழங்கவும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தமிழகத்தில் தயாரிக்கும் பீர் வகைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதால் இப்போது வெளிமாநிலத்தில் தயாரிக்கப்படும் பீர் வகைககளை வாங்கவும் டாஸ்மாக் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related posts

ஆம்ஸ்ட்ராங் கொலை: பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கண்டனம்

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலை : 8 பேர் கைது

ஜூலை-06: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை