நள்ளிரவில் அவரது அலறல் சத்தம் கேட்டு சீதா வந்து பார்த்தபோது, அவரது கணவர் வீட்டின் அருகில் உள்ள காலி இடத்தில் கீழே விழுந்து, பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே இறந்தது தெரிந்தது. இதுகுறித்து சேலையூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.அண்ணாநகர்: முகப்பேர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் முனுசாமி (53), பிளம்பர். இவர், நேற்று முன்தினம் மது போதையில் 3வது மாடிக்கு சென்றபோது, படிக்கட்டில் தவறி விழுந்ததில் பலத்த காயமடைந்து, பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஜெ.ஜெ.நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.