இதனால் அதிர்ச்சியடைந்த சூர்யா, உயிரை காப்பாற்றிக்கொள்ள வெளியே ஓடினார். ஆனால் அந்த கும்பல் அவரை துரத்திச்சென்று சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பியது.
இதுகுறித்து தகவல் அறிந்த அலங்காநல்லூர் போலீசார் சூர்யாவின் உடலை கைப்பற்றி மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்தை மதுரை எஸ்பி அரவிந்த், டிஎஸ்பி ஆனந்தகுமார் பார்வையிட்டனர்.
கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். அலங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த படுகொலை பழிக்குப்பழியாக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.