மண்டலக்குழு தலைவர் என்.சந்திரன், பகுதி செயலாளர் பி.குணாளன், வட்ட செயலாளர் கே.பி.முரளிகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பங்கேற்று, மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 1500 குடும்பங்களுக்கு அரிசி, காய்கறி, பெட்ஷீட் உள்பட பல்வேறு நிவாரண உதவிகளை வழங்கினார். இதில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கோல்டு பிரகாஷ், பகுதி நிர்வாகிகள் கே.ஆர்.ஜெகதீஸ்வரன், மீன் மோகன், எம்.வி.குமார். ஸ்ரீதர், வி.ராஜா, சாகிம்சா, கீர்த்திராஜ், கலாநிதி குணாளன், காமராஜ், பூவராகவன், கோபி, ரவின்குமார், ஹார்பர் குமார், எம்டிசி ராஜ், தீனன், காஜாமொய்தீன், விக்கி, உதயா, பாரூக், கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் 156வது வார்டில் கவுன்சிலர் செல்வேந்திரன், 157வது வார்டில் வட்ட செயலாளர் ரவி, 158வது வார்டில் கவுன்சிலர் பாரதி குமரா, 161வது வார்டில் கவுன்சிலர் ரேணுகா சீனிவாசன் ஆகியோர் தலைமையில், மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 7500 குடும்பங்களுக்கு அரிசி, காய்கறி, பெட்ஷீட் உள்பட பல்வேறு நிவாரண உதவிகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார். இதில் எம்.ஜி.கருணாநிதி, செய்யது அபுதாஹீர், ஆதம் லட்சுமிபதி, அழகேசன், கோட்டீஸ்வரன், சத்யா, வெங்கடேஷ். முனுசாமி, ஆன்ட்ரூஸ், முனியாண்டி, சக்ரவர்த்தி, சச்சீஸ்வரி, உள்பட பலர் கலந்துகொண்டனர்.