அழகர்கோவில் உபகோயில்களில் 11 லட்சம் உண்டியல் வசூல்

அழகர்கோவில், ஏப். 19: மதுரை மாவட்டம் அழகர்கோவில் கள்ளழகர் கோயிலின் உபகோயில்களான மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோயில், தல்லாகுளம் ஐயப்பன் கோயில், வண்டியூர் வீரராகவ பெருமாள் கோயில் ஆகிய மூன்று கோயில்களில் உண்டியல்கள் நேற்று திறந்து எண்ணப்பட்டது. இதில் ரொக்கம் ரூ.11 லட்சத்து 13 ஆயிரத்து 724 இருந்தது. தங்கம் 22 கிராமும், வெள்ளி 15 கிராமும் இருந்தது. இந்த உண்டியல் திறப்பின் போது கள்ளழகர் கோயில் துணை ஆணையர் ராமசாமி, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் துணை ஆணையர் சுரேஷ்,வடக்கு ஆய்வர் ஜெயலட்சுமி, தக்கார் பிரதிநிதி நல்லதம்பி, கண்காணிப்பாளர்கள் அருள் செல்வன், மற்றும் கோவில் பணியாளர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related posts

முன்னாள் ராணுவவீரர் வீட்டில் 15 சவரன் திருட்டு மர்ம ஆசாமிகளுக்கு வலை குடியாத்தத்தில் துணிகரம்

இன்ஸ்டாகிராமில் பழகிய சிறுமிக்காக மல்லுக்கட்டிய 2 வாலிபர்கள் மோதலில் ஈடுபட்ட 10 பேர் மீது வழக்கு ஒடுகத்தூர் அருகே பரபரப்பு

உயர்அழுத்த மின்கம்பி மீது உரசிய ரயில்வே கம்பத்தால் எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தம் பயணிகள் அவதி வேலூரில் லாரி மோதியதால்