பாடாலூர்: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா செங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் மகன் கலைவாணன் (26) இவர். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா ஆலத்தூர்கேட்டில் தங்கி நான்கு சக்கர வாகனத்தில் சுற்றுப்புற பகுதியில் காய்கறி வியாபாரம் செய்து வந்துள்ளார். இவர் நேற்றிரவு ஆலத்தூர்கேட்டில் இருந்து செட்டிகுளம் நோக்கி பைக்கில் சென்றார். அப்போது அந்த பைக் கலைவாணன் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் கலைவாணனுக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது. உடனடியாக அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இன்று அதிகாலை கலைவாணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.