இலகு ரக வணிக வாகனம், ஜே.சி.பி., கிரேன் உள்ளிட்ட வாகனங்களுக்கு சுங்கக்கட்டணம் ரூ.310-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த உயர்த்தப்பட்ட சுங்கக்கட்டணம் என்பது இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வர உள்ளது.இந்த அதிகரிக்கப்பட்ட சுங்கக்கட்டணம் என்பது அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள முக்கிய நெடுஞ்சாலையில் ஒன்று ஈசிஆர் எனும் கிழக்கு கடற்கரை சாலை. இந்த சாலையில் சென்னை அக்கரை – மாமல்லபுரம் இடையே 30 கிலோமீட்டர் தொலைவுக்கு சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.