இந்நிலையில் கடந்த டிசம்பர் 12ம் தேதி நடைபெற்ற அஸ்த்ரசக்தி ராணுவ பயிற்சியில் இந்திய விமானப்படையின் 25 கிமீ தூரம் செல்லக்கூடிய ஆகாஷ் ஏவுகணையின் திறன் சோதனை செய்யப்பட்டது. இதுகுறித்து இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு வௌியிட்டுள்ள அறிவிப்பில், “ 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள 4 வான்வழி இலக்குகளை ஒரேநேரத்தில் தாக்கும் ஆகாஷ் ஏவுகணையின் திறனை இந்தியா நிரூபித்துள்ளது. இந்த திறனை வௌிப்படுத்திய முதல்நாடு இந்தியா” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.