பின்னர் அதே ஆண்டு ஆட்சி அமைப்பதற்காக சோனியா தலைமையிலான காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்தார். 2004ம் ஆண்டு மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியை விட தேசியவாத காங்கிரஸ் அதிக இடங்களை கைப்பற்றிய போது, முதல்வர் பதவியை காங்கிரஸ் கட்சி தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு விட்டுக்கொடுத்தது. ஆனால் சரத் பவார் கூடுதலாக 4 அமைச்சர் பதவிகளை பெற்றுக்கொண்டு முதல்வர் பதவியை விட்டுக்கொடுத்தார். அப்போதே நான் தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்திருக்க வேண்டும். அவர் எடுக்கும் முடிவுகள் ராஜதந்திரம் என் வர்ணிக்கப்படுகிறது. நான் எடுக்கும் முடிவுகள் துரோகம் என்று வர்ணிக்கப்படுகிறது.
இவ்வாறு அஜித் பவார்பேசினார்.