இதனிடையே மகாராஷ்டிரா, அசாம், பீகார் ஆகிய மாநிலங்களில் தலா இரண்டு மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான இடங்களும், அரியானா, மத்தியபிரதேசம், ராஜஸ்தான் மற்றும் திரிபுராவில் தலா ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடமும் காலியாக இருப்பதாக மக்களவை செயலகம் அறிவிப்பு வௌியிட்டது. இந்நிலையில் மக்களவை தேர்தலில் படுதோல்வியடைந்த சுனேத்ரா பவாரை மாநிலங்களவை தேர்தலில் நிறுத்த அஜித் பவார் முடிவு செய்துள்ளார். இதற்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியினரும் ஆதரவு தெரிவித்துள்ளதால் சுனேத்ரா பவார் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.