மேலும் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வைத்து கொலை செய்வதற்கான சதியில், இந்திய தொழில் அதிபர் நிகில் குப்தா ஈடுபட்டதாக அமெரிக்க உளவு அமைப்பு குற்றம் சாட்டியது. இந்திய அதிகாரியின் உத்தரவிற்கு இணங்க நிகில் குப்தா இந்த செயலில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து குர்பத்வந்த் சிங் பன்னு நியூயார்க் நீதிமன்றத்தில் தன்னை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியதாக இந்தியாவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்ட 4 பேருக்கு சம்மன் அனுப்பி உள்ளது. இந்த வழக்கில் 3 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.