டெல்லி : ஏர்டெல், ஜியோ, வோடபோன் நிறுவனங்களின் செல்போன் கட்டண உயர்வுக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. செல்போன் கட்டண உயர்வு மூலம் 109 கோடி செல்போன் வாடிக்கையாளர்கள் மீது ரூ.35,000 கோடி சுமை ஏற்றப்படுவதாக சாடிய காங்கிரஸ், கட்டண உயர்வு அறிவித்துள்ள ஏர்டெல், ஜியோ, வோடபோன் நிறுவன முதலீடு, வருமானம், சேவை அளவில் மாறுபாடு உள்ளது என்றும் ஆனால் கட்டண உயர்வை மட்டும் 3 நிறுவனங்களும் 15 முதல் 20% கட்டண உயர்வை ஒரே மாதிரியாக அறிவித்தது எப்படி? என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.