இந்த வேலை நிறுத்தம் காரணமாக பல விமான நிலையங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன. விமான நிலையத்தில் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பலரும் தங்களின் விமானம் திட்டமிட்டபடி புறப்படுமா என உறுதி செய்ய முடியாமல் சிரமப்பட்டனர்.
மத்திய தொழிற்சங்க பொதுச் செயலாளர் பிரான்சிஸ் அட்வோலி அளித்த பேட்டியில், ‘‘ஊழியர்களின் பேச்சை அரசு கேட்டிருந்தால் இந்த வேலைநிறுத்தம் தவிர்க்கப்பட்டிருக்கும்’’ என்றார். இதற்கிடையே, இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வரும் வரை இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதை அந்நாட்டு உயர் நீதிமன்றம் கடந்த திங்கட்கிழமை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.