சென்னை: சென்னை விமான நிலையத்தில் கானா நாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.21 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கொக்கைன் போதைப் பொருளை பெண் ஒருவர் தனது பை, காலணியில் மறைத்து எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போதைப் பொருளை கடத்திவந்த பெண்ணை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் சிறையில் அடைத்தனர்.