இதுகுறித்து வெளியான ஆய்வு அறிக்கையில், ‘காற்று மாசுவால் டெல்லி, அகமதாபாத், பெங்களூரு உள்ளிட்ட 10 நகரங்களில் ஆண்டுக்கு 30,000 பேர் உயிரிழந்து வருகின்றனர். மேலும், கடந்த 2008 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் டெல்லியில் மட்டும் 12,000 பேர் பலியாகி உள்ளனர். இதே காலகட்டத்தில் பெங்களூரில் 2,102 பேரும், குறைந்தபட்சமாக சிம்லாவில் 59 பேரும் உயிரிழந்துள்ளனர். லக நாடுகளில் உள்ள 272 முக்கிய நகரங்களில் காற்று மாசு குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அதில், கிரீஸில் 2.54 சதவீதமும், ஜப்பானில் 1.42 சதவீதமும், ஸ்பெயினில் 1.96 சதவீதமும், சீனாவில் 0.22 சதவீதமும், பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது,’என்று அதில் கூறப்பட்டுள்ளது.