இதனால் பயணிகள் பீதி அடைந்து கதறினர். இதனைத் தொடர்ந்து அவசரமாக போர்ட்லாண்டில் விமானம் தரையிறக்கப்பட்டது. கதவு தனியாக உடைந்து விழுந்த போது விமானம் 16,000 அடியில் உயரத்தில் பறந்து கொண்டிருந்ததாக தெரிகிறது. இதுதொடர்பான படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளன. அதில் விமானத்தின் நடுவில் உள்ள ‘எக்ஸிட் டோர்’ உடைந்து விழுந்துள்ளது. விமான பாதுகாப்பு நிபுணர் அந்தோணி பிரிக்ஹவுஸ் கூறுகையில், ‘அந்தப் பயணிகள் எதிர்கொண்ட பயங்கர அனுபவத்தை என்னால் கற்பனைகூட செய்து பார்க்க முடியவில்லை. அந்தச் சம்பவம் பயங்கர சத்தத்துடன் இருந்திருக்கும். காற்று அதிகமாக விமானத்துக்குள் நுழைந்திருக்கும். நிச்சயமாக இது ஒரு பயங்கரமான சூழ்நிலை தான்’ என்று தெரிவித்திருந்தார். இந்த சம்பவம் பற்றி விசாரணை நடந்து வருகிறது.