இந்த விமானத்தில் பெங்களூருவில் இருந்து திருச்சிக்கு 30 பயணிகள் பயணம் செய்தனர். அதே விமானம் மீண்டும் திருச்சி விமான நிலையத்தில் இருந்து நேற்று அதிகாலை 3.30 மணிக்கு புறப்பட்டு காலை 4.40 மணிக்கு பெங்களூர் விமான நிலையத்தை சென்றடைந்தது. இந்த விமானத்தில் 78 பயணிகள் திருச்சியில் இருந்து பெங்களூர் நோக்கி பயணம் செய்தனர். இந்த விமான சேவை வாரத்தில் 2 நாட்கள் இயக்கப்படுகிறது. அதில் திருச்சியில் இருந்து ஒவ்வொரு வாரமும் வியாழன் மற்றும் திங்கட்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு இந்த விமானம் இயக்கப்படுகிறது. தற்போது இந்த விமானத்தில் திருச்சியில் இருந்து பெங்களூர் வரை பயணிக்க ரூ.2,200 வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாக ஏர் இந்தியா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.