அவரது கூற்றை ஏற்க மறுத்த பயணி, அதிகாரியிடம் வாக்குவாதம் செய்தார். ஒருகட்டத்தில் இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டது. இதனால் விமானத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. விமான ஊழியர்கள் தலையிட்டு, இருவரையும் சமாதானப்படுத்தி அமர வைத்தனர். இதுகுறித்து ஏர் இந்தியா செய்தி தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், ‘கடந்த 9ம் தேதி சிட்னியில் இருந்து டெல்லி சென்ற விமானத்தில் பயணி ஒருவர், ஏர் இந்தியா விமான அதிகாரியிடம் தவறாக நடந்து கொண்டார். பலமுறை எச்சரித்தும் அவரது நடத்தையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஏர் இந்தியா ஊழியர் உட்பட பயணிகளுக்கு இடையூறு ஏற்பட்டது. மேற்கண்ட விமானம் டெல்லியில் பத்திரமாக தரையிறங்கிய பிறகு, அந்த நபரை போலீசில் ஒப்படைத்தோம். அவர்கள் அந்த நபர் மீது வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்’ என்று தெரிவித்துள்ளார்.