ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் 6 புதிய விமான சேவைகள் தொடக்கம்

சென்னை: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் 6 புதிய விமான சேவைகளை நேற்று தொடங்கி உள்ளது. சென்னை உள்நாட்டு விமான நிலையம் டெர்மினல் 4ல் இருந்து தினமும் காலை 7.45 மணிக்கு புறப்படும் ஏர் இந்தியா விமானம் காலை 9.30 மணிக்கு ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் சென்றடைகிறது. அதே ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் காலை 10 மணிக்கு புவனேஸ்வரிலிருந்து புறப்பட்டு, பகல் 12 மணிக்கு சென்னை வந்து சேர்கிறது.

அதன்பின்பு பகல் 12.35 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படும் ஏர் இந்தியா விமானம் மாலை 3.10 மணிக்கு பக்டோரா சென்றடைகிறது. அதே விமானம் மாலை 3.40 மணிக்கு பக்டோரா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, மாலை 6.15 மணிக்கு சென்னை வந்து அடைகிறது.தொடர்ந்து, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் மாலை 6.50 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு இரவு 8.20 மணிக்கு கேரள மாநிலம் திருவனந்தபுரம் சென்றடைகிறது. பின்பு விமானம் இரவு 8.50 மணிக்கு திருவனந்தபுரத்திலிருந்து புறப்பட்டு இரவு 10.20 மணிக்கு சென்னை திரும்புகிறது.

Related posts

புரட்டாசி மாத கிருத்திகை முன்னிட்டு திருத்தணி முருகன் கோயிலில் பல்லாயிரம் பக்தர்கள் குவிந்தனர்: 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

செங்கல்பட்டு அருகே இன்று அதிகாலை பயங்கரம்; நடைபயிற்சி சென்ற வாலிபர் அரிவாளால் வெட்டி கொலை: முன்விரோதமா? போலீசார் விசாரணை

திருப்பதி கோயில் லட்டு விவகாரம்; ஆந்திர துணை முதல்வர் பவன்கல்யாண் 11 நாள் விரதம்