இதனை எதிர்த்து சிபிஐ டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு நீதிபதி ஸ்வரணா காந்த சர்மா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஜெயின், சில நேரங்களில் ஆதாரமற்றவையாக ஒதுக்கப்படும் ஆவணங்கள், சில காலத்துக்கு பின்பு விசாரணை அமைப்புக்கு உதவக்கூடும். ,’’ என்று வாதிட்டார். இதனைத் தொடர்ந்து இது தொடர்பாக ஒரு வாரத்தில் பதிலளிக்கும்படி முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரத்துக்கு நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து விசாரணையை ஜனவரி 11ம் தேதிக்கு உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.