சென்னை : முக்கிய நகரங்களில் காற்று மாசுவைக் கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார். சென்னை, திருச்சி, மதுரை, தூத்துக்குடியில் காற்று மாசுவைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றும் தூத்துக்குடியில் 200 ஏக்கர் பரப்பளவில் பசுமை பூங்கா அமைக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.