நாடு முழுவதும் நண்பகலுக்குள் விமான சேவை முழுவதும் சீரடைந்துவிடும்: விமான போக்குவரத்து அமைச்சகம் விளக்கம்

டெல்லி: நாடு முழுவதும் நண்பகலுக்குள் விமான சேவை முழுவதும் சீரடைந்துவிடும் என விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. மைக்ரோசாஃப்ட் மென்பொருள் கோளாறு காரணமாக விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் தற்போது படிப்படியாக விமான சேவை சீராகி வருவதாக ஒன்றிய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

Crowd Strike-ன் இணைய பாதுகாப்பு கோளாறால் மைக்ரோசாஃப்ட் சேவையில் நேற்று (ஜூலை19) உலகம் முழுவதும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் 1,400 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. 3,000க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதியடந்தனர்.

இந்த நிலையில் மைக்ரோசாஃப்ட் பிரச்னைக்கு தீர்வு காண CrowdStrike மற்றும் தொழில்துறையினர் தீவிரமாக பணியாற்றி வருவதாகவும், வாடிக்கையாளர்களின் கணினிகள் பாதுகாப்பாக மீண்டும் செயல்பட வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மைக்ரோசாஃப்ட் சி.இ.ஓ. சத்யநாதெல்லா தெரிவித்தார்.

இதனையடுத்து இந்தியாவில் இன்று அதிகாலை முதல் விமானப் சேவை படிப்படியாக சீராகி வருவதாக விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் நண்பகலுக்குள் விமான சேவை முழுவதும் சீரடைந்துவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

28ம் தேதி காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி திடலில் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பவள விழா பொதுக்கூட்டம்: மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆலோசனை