எனவே அபகரித்த வீட்டை மீட்டுத்தருமாறு நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முதியவர் மனு அளித்துள்ளார். கலெக்டர் மனுவின் மீது விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இது குறித்து அதிமுக கவுன்சிலரின் கணவர் கூறுகையில், ‘குறிப்பிட்ட வீட்டிற்கான பணம் ரூ.28 லட்சத்தை முன்பே மாமனாரிடம் கொடுத்து விட்டோம். அதை வைத்துதான் அவருடைய இளைய மகளுக்கு திருமணம் செய்தார். ஆனால் அந்த பத்திரம் அடமானத்தில் இருந்ததால் கிரையம் செய்யவில்லை. வீட்டை எனது மாமனார் இளைய மகளுக்கு தானசெட்டில்மெண்ட் செய்துள்ளார். இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளோம்’ என்றார்.