தற்போது, இந்த விழாவின் வாயிலாக இறுதியாகவும், உறுதியாகவும் கூறுகிறேன், பாஜவுடன் அதிமுக கூட்டணி இல்லை.. இல்லை.. இனி எந்த இடத்திலும் அதிமுக, பா.ஜ.வுடன் கூட்டணியா என்று கேட்க வேண்டாம். நாங்கள் மக்களை நம்புகிறோம். மக்களுடன் கூட்டணி வைக்கிறோம். அவர்களே எங்களின் எஜமானர்கள். அதிமுக சாதி-மதத்திற்கு அப்பாற்பட்ட கட்சி. மக்களை நேசிக்கும் கட்சி. இந்த கட்சியில் கடைக்கோடி தொண்டனும் உயர் பொறுப்புக்கு -பதவிக்கு வரலாம். சிறுபான்மை மக்களை பாதுகாக்கும் கட்சியாக அதிமுக உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில், அதிமுக வலுவான கூட்டணி அமைக்கும். உரிய நேரத்தில் அதை தெரிவிப்போம். தேர்தலில் அதிமுகவுக்கும், அதிமுகவுடன் கூட்டணி வைக்கும் கட்சிகளுக்கும் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. இவ்வாறு எடப்பாடி பேசினார்.