சென்னை: அதிமுக ஆட்சியில் தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகனராவ் மீது எப்பொழுது எஃப்.ஐ.ஆர். போடப்படும்? என்று அறப்போர் இயக்கம் கேள்வி எழுப்பியுள்ளது. புகார் அளித்து 6 ஆண்டுகளாகியும் இன்னும் எஃப்.ஐ.ஆர். போடப்படாதது ஏன்? என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. 2017-ல் அளித்த புகாரில் முதற்கட்ட விசாரணை முடிந்த நிலையில் எஃப்.ஐ.ஆர். போடப்படவில்லை என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகள் பராமரிப்பு டெண்டரை தனது சகோதரர் நிறுவனத்துக்கு ராம மோகனராவ் வழங்கியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.