கள்ளக்குறிச்சி: விஷச் சாராய சம்பவத்துக்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தி வரும் 24-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது. 24-ம் தேதி காலை 10 மணி அளவில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம். கள்ளக்குறிச்சியில் நடந்த சம்பவம் போன்று மீண்டும் நடைபெறாதவாறு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டம் நடைபெறவுள்ளது.