சென்னை: காவிரி விவகாரம் தொடர்பாக நாளை நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்கிறது. அதிமுக சார்பில் யாரை அனுப்புவது என்பது பற்றி கட்சியின் தலைமை ஆலோசனை எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவிரி டெல்டா மாவட்டத்தை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் உட்பட இருவரை அனுப்ப அதிமுக திட்டமிட்டுள்ளது.