சென்னை: அதிமுகவில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் என்று மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சசிகலா மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன் மற்றும் என்.செந்தில்குமார் தீர்ப்பளித்துள்ளனர்.