சென்னை: இத்தனை நாட்கள் அதிமுகவை காப்பாற்றியது யார் என்று சசிகலாவுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். 2021ல் அரசியல் ஓய்வு என கூறிய சசிகலா, இப்போது ஏன் வருகிறார்? தற்போது திடீரென மீண்டும் என்ட்ரி என்றால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? என எடப்பாடி தெரிவித்துள்ளார்.