அண்ணாமலை என்னை பார்த்து அடிக்கடி ஒரு கேள்வி கேட்பார். கனிமொழிக்கு என்ன தகுதி இருக்கிறது என்று, இரண்டாவது முறையாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மக்கள் பிரதிநிதியாக நான் அவருக்கு பதில் சொல்கிறேன், நீங்கள் அந்த தகுதியை கூட பெறவில்லை. எனவே இந்த தகுதி இல்லாத ஒருவர், தமிழ்நாட்டின் பாஜவின் தலைவராக நீடிப்பது அந்த கட்சிக்கு நிச்சயமாக நல்லது கிடையாது. அதிமுக கடந்த காலத்தில் செய்த தவறுக்காக மக்கள் அவர்களுக்கு தண்டனை கொடுத்துள்ளனர். வாக்கு எண்ணிக்கையில் முதல் சில சுற்றுகளில் பின்தங்கி தோல்வி முகத்தில் இருந்த மோடி, தோல்விக்கு தார்மீக பொறுப்பேற்று உடனடியாக பதவி விலக வேண்டும். இவ்வாறு கனிமொழி கூறினார்.