இதனிடையே பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியதற்கு அதிமுக தொண்டர்கள் பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அதிமுக – பா.ஜ.க. கூட்டணி முறிவு குறித்து பதில் அளிக்க எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவித்துவிட்டார். ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் கனகதுர்க்கை அம்மன் கோயிலில் தரிசனம் செய்த பிறகு எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறியது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்க பழனிசாமி மறுப்பு தெரிவித்துவிட்டார். கூட்டணி முறிவு குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளிக்காமல் பழனிசாமி புறக்கணித்தார். பா.ஜ.க. உடனான கூட்டணி முறிவு குறித்து தலைவர்கள் வெளிப்படையாக பேச தயங்குவதால் தொண்டர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.