எனவே, இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்குமாறு உத்தரவிட வேண்டும்,’ என்று கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது. இந்நிலையில், சிபிசிஐடி உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்தார்.
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, ஊராட்சி மன்ற தலைவி அமுதா இன்னும் தலைமறைவாக இருப்பதாகவும், அவரை தேடி வருவதாகவும் சிபிசிஐடி சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவரை உடனடியாக ஊராட்சி மன்ற தலைவர் பதவியில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகளை திருவாரூர் மாவட்ட கலெக்டர் உடனடியாக தொடங்க வேண்டும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார். மேலும், அமுதாவை கைது செய்வதற்கான நடவடிக்கையை சிபிசிஐடி தொடர வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை பிப்ரவரி 12ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.