சென்னை: அதிமுக நடத்தும் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக் கூட்டத்துக்கு அனுமதி வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தண்டையார்பேட்டையில் எம்.ஜி.ஆர். விழா பொதுக் கூட்டத்தை நடத்த அனுமதி வழங்க காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை முன்னிட்டு ஆர்.கே.நகர் சுண்ணாம்பு கால்வாய் பகுதியில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. ஜன.19-ல் அதிமுக பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்க உத்தரவிட்டு வழக்கை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது.