அண்ணாமலையை பார்த்து அதிமுகதான் சிரிக்கிறது: கடம்பூர் ராஜூ எம்எல்ஏ காட்டம்


கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அதிமுக எம்எல்ஏ கடம்பூர் ராஜூ கூறியதாவது: பாஜ மாநில தலைவர் அண்ணாமலையை பார்த்துத்தான் நாங்கள் சிரிக்க வேண்டி உள்ளது. அண்ணாமலைக்கு பக்குவம் இல்லை. 2014 நாடாளுமன்ற தேர்தலில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தான் பிரதமர் வேட்பாளர் என்று கூறி தனித்து நின்றோம், 37 இடங்களில் வெற்றி பெற்றோம்.

1990ல் சந்திரசேகர் மற்றும் 1998ல் வாஜ்பாய் ஆகியோர் பிரதமராக வர அதிமுக கொடுத்த ஆதரவு தான் காரணம். இதற்கு அண்ணாமலைக்கு சிரிப்பு வரவில்லையா. அன்றைக்கு அவர் இல்லை. சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் பாஜவுடன் கூட்டணி அமைப்பது அவர்களின் உரிமை. யாரும் யாருடனும் கூட்டணி சேரலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

உக்ரைன் போர் விவகாரத்திற்கு மத்தியில்; பிரதமர் மோடி ரஷ்யா பயணம்: ஆஸ்திரியாவும் செல்கிறார்

இரு அவைகளையும் ஜனாதிபதி ஒத்திவைத்த நிலையில் 23ம் தேதி ஒன்றிய பட்ஜெட் தாக்கல்?: 22ம் தேதி மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது

தமிழகத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் 15ல் தொடங்கி வைக்கிறார்: திருவள்ளூர் மாவட்டத்தில் பிரமாண்ட விழாவுக்கு ஏற்பாடு