மேற்கு வங்க ரயில் விபத்திற்கு ஒன்றிய அரசின் ரயில்வே துறை தான் பொறுப்பு ஏற்க வேண்டும், தொழில்நுட்ப வல்லுநர்கள் ஊழியர்கள் மீது குற்றம் சாட்டி தப்பிக்க நினைப்பதை ஏற்க முடியாது. விபத்துக்கு உரிய காரணம் கூறாத ரயில்வே அமைச்சர், பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். நீட் தேர்வில் நாடு முழுவதும் பெரியளவில் குளறுபடிகள் ஏற்பட்டு உச்ச நீதிமன்றமே தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது. எனவே ஒன்றிய அரசு உடனடியாக நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.