சென்னை: அண்ணாவின் 116வது பிறந்த நாளை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று மதுரவாயல் வடக்கு பகுதி பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், திருவள்ளூர் மத்திய மாவட்ட கழக பொருளாளர் ஜாவித் அகமத், அகால மரணமடைந்துவிட்டதால், கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு 21ம் தேதி நடக்கும் என அதிமுக அறிவித்துள்ளது.