அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு எதிரான வழக்கை ஒத்திவைத்தது ஐகோர்ட்..!!

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு எதிரான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. 2001-06 அதிமுக ஆட்சிக் காலத்தில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்த வளர்மதிக்கு எதிராக சொத்துக்குவிப்பு வழக்கு தொடரப்பட்டது. வழக்கில் இருந்து வளர்மதி உள்ளிட்டோரை விடுவித்தது தொடர்பாக மறு ஆய்வு வழக்கு தொடரப்பட்டிருந்தது. வளர்மதி தரப்பு கோரிக்கையை ஏற்று வழக்கை நவம்பர் 6ம் தேதிக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் தள்ளிவைத்தார்.

Related posts

ஓரிக்கை சமத்துவபுரம் குடியிருப்பில் மழைநீர் வடிகால்வாய் அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

உத்திரமேரூரில் திரவுபதியம்மன் கோயிலில் துரியோதனன் படுகளம்

மீண்டும் முதல் மனைவியுடன் வாழ ஆசைப்பட்டு 2வது மனைவியை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற கணவரிடம் போலீசார் விசாரணை: காஞ்சிபுரத்தில் பரபரப்பு